Tuesday 20 June 2017

2.46 சிறுமை விண்ணப்பம்


இன்று நின்றவர் நாளைநின் றிலரே
என்செய் வோம்இதற் றுளம் பதைத்துச்
சென்று நின்றுசோர் கின்றனன் சிவனே
செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
நன்று நின்துணை நாடக மலர்த்தாள்
நண்ண என்று நீ நயந்தருள் வாயோ
பொன்றல் இன்றிய எழில்ஒற்றி அரசே
போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே

அழிவே இல்லாத அருட்பெருஞ்ஜோதியான இறைவன்
கண்மணியில் துலங்குகிறான். உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவானவன். எவ்வுயிர்க்கும் தாய் அவன்! அவள் இருக்கிறவரை
- அவன் நம் உடலில் இருக்கும் வரை உடல் அழியாது. இறைவனாகிய ஒளி-உயிர் நம்மை விட்டு பிரிந்தால் இந்த உடல் அழிந்து விடும். உயிர்
அழிவதேயில்லை! இன்று இருப்பவர் நாளை இல்லையே! நேற்று இருந்தவர்
இன்று இல்லையே! நேற்று இருந்தவர் இன்று இல்லையே என்செய்வோம்
என ஏதுமறியாது உளம் கலங்கி வாடுகின்ற நாம் என்றும் நமக்கு துணை இறைவனின் மலரடி - கண்ணொளி என்பதை உணர்வோமாக! உணர்ந்து
தவம் செய்து இறையருளை பெறுவோமாக.

கந்தமும் மலரும் என நின்றாய் - பாடல் 6

மலரும் மணமும் போல இறைவன் சிவமும் சக்தியுமாக இருக்கிறான். விந்துவும் நாதமும் ஆக இருப்பவனே ஒலியும் ஒளியுமானவன்!

"நாத விந்து கலாதி நமோநம வேதமந்த்ர சொரூபா"
என அருணகிரியார் பாடலும் உரைப்பது இதுவே! நாத விந்துவான இறைவனே வேத மந்திர சொரூபமாக உள்ளவன் - ஒளியானவன் - கண்மணி ஒளியானவன்!

தத்து மத்திடைத்தயிரென வினையால் தளர்ந்து முப்பிணியில் தண்டுகொண்டு ழன்றே செத்து மீளவும் பிறப்பு

புத்தை நீக்கிய ஒற்றியம் பரனே - பாடல் 9

தயிர் வேண்டுமாயின் பாலை காய்ச்சி உறை விட்டு மத்து கொண்டு கடைய வெண்ணெய் தனியே தயிர் தனியே வருவது போலவே நம் தவமும்! நம் கண்மணியில் - உணர்வாகிய மத்தை
நாட்டி கடைய, பாலிலிருந்து, வினை கண்மணியிலிருந்து சுழன்று
விடும். இங்ஙனம் தவம் மேலோங்கும் போது ஒளி பெருகி வினையற்றுப் போகும். வினை பிரிந்து இல்லாதாக்குதலே தவம்!
புத்தை நீக்கிய ஒற்றியம் பரனே - என்பது நம் கண்மணியில் புற்று போல
வளர்ந்திருப்பது மறைந்திருப்பது வினை உள்ளிட்டமும் மலம். அதை நீக்க கண்மணி ஒளி பெருக வேண்டும். இதுதான் தவம் கண்மணி ஒளியில்
உணர்வூட்டினால் புத்தாகிய மும்மலம் நீங்கி விடும்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

No comments:

Post a Comment