Wednesday 21 June 2017

47 ஆற்றா விண்ணப்பம்

அன்னையில் பெரிதும் இனிய என் அரசே
அம்பலத் தாடல் செய் அமுதே
பொன்னைஒத் தொளிரும் புரிசடை கனியே
போதமே ஒற்றிஎம் பொருளே
உன்னைவிட் டயலார் உறவு கொண் டடையேன்
உண்மைஎன் உள்ளம் நீ அறிவாய்
என்னைவிட் டிடல் நான் என் செய்வேன் ஓதிபோல்
இருக்கின்ற இவ்வெளி யேனே

பெற்ற தாயினும் பெரிய தயவுடைய தயாபரன் இறைவன்!
எவ்வுயிர்க்கும் தாயானவன் இறைவன்! நமக்கு உடல்
கொடுத்தவள் தாய்! அந்த உடலுக்கு உயிர் கொடுத்தவன்
எவ்வுயிர்க்கும் உயிரானவன் இறைவனே! அவர் எல்லோர் கண்ணிலும்
அம்பலமாக எல்லோரும் அறிய ஆடிக்கொண்டிருப்பவன் ஒளியாக! தவம்
செய்தால் அமுதம் தருபவன்! பொன் போன்று தக தகக்கும் மஞ்சளும்
சிவப்பும் கலந்த ஒளிப் பிழம்பு! சடை போன்று நீண்டு நம் உள்
ஓங்கி ஒளிர்பவன்! நம்மை கனிய வைக்கும் பக்குவமாக்கும் ஒளி!
போதம் எப்போதும் இருக்கச் செய்பவன்! உணர்வின் மூர்த்தி!
நம் கண்மணியில் ஒளியாக துளங்குபவன்! உன்னை விட்டு வேறு
எங்கும் போகேன்! என் உள்ளம் நீ அறிவாய்! காரணம், என் உள்ளத்தில்
ஒளியாக இருப்பவன் நீயன்றோ! உனக்கு தெரியாமல் எதுவும்
நடப்பதில்லையே! எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருப்பவன் நீயல்லவா!

என்னை விட்டிடில் நான் பிணமாவேனே! மரம்போல் உணர்வற்றிருக்கம் எனக்கு என்றும் உணர்வோடு இருக்க ! நீ என்னுடன் இருக்க அருள்வாயே!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

No comments:

Post a Comment