Wednesday 7 June 2017

2.45 வழிமொழி விண்ணப்பம்


நீல னேன்கொடும் பொய்யல துரையா
நீசன் என்பதென் நெஞ்சறிந் ததுகாண்
சால ஆயினும் நின்கழல் அடிக்கே
சரண்பு குந்திடில் தள்ளுதல் வழக்கோ
ஆலம் உண்டநின் தன்மைமா றுவதேல்
அகில கோடியும் அழிந்திடும் அன்றே
சீல மேவிய ஒற்றியம் பரனே
தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே.


பொய்மையைத்தவிர வேறு எதுவும் பேசாத நீசன்! நான் என்பதை
என் நெஞ்சில் ஐந்தும் சேர்ந்த கண்மணியில் ஒளியாக துலங்கும்
நீ அறிவாயே! இறைவா நீயே கதி என உன் திருவடியை சரணடைந்த
என்னை கைவிட்டிடாதே! ஆலகால விஷத்தை உண்டு தேவர்கள்
காத்தது போல் என் விஷமாம் மும்மலத்தை உண்டு. என் உள்
ஒளியே சிவமே காப்பாற்று. இல்லையேல் நான் அழிந்து விடுவேன்.
நல்ல அருள் கொண்ட என் கண் அம்பலத்தில் நடமிடும் ஒளியாகிய
இறைவனே காப்பாற்று! அருள்புரி!

ஒற்றி அரசே திருச்சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே - பாடல் 7
கண்மணி ஒளியே - திருவாகிய இறைவன் - சின்ன அம்பலமாகிய
கண்ணில் மணியில் திகழ்கிறான் ஒளி விளக்காக! திரு - சின்ன - அம்பலம்
திருச்சிற்றம்பலம். சின்ன அம்பலம் கண்ணில் திரு - ஒளியாகிய இறைவன்
உள்ளான்.

ஞான சற் குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

No comments:

Post a Comment