Wednesday 31 May 2017

2.43 பிரசாத விண்ணப்பம்


பசைஇலாக் கருங்கல் பாறைநேர் மனத்துப்
பாதகனேன் படிற்றுரு வகனேன்
வசை இலார்க் கருளும் மாணிக்க மணியே
வள்ளலே நினைத்தொழல் மறந்து
நசை இலா மலம்உண் டோடுறும் கொடிய
நாய் என உணவு கொண் டுற்றேன்
தசை எலாம் நடுங்க ஒற்றியில் உன்னால்
தண்டிக்கப்பட்டனன் அன்றே

நெஞ்சில் கொஞ்சங் கூட இரக்கம் இல்லாது,
கொடிய செயல் புரியும் உடல் படைத்த
மிருகமாக வாழ்கிறோம்! குற்றமற்ற நல்ல
பண்பாளார்க்கு அருள் புரிகின்ற மாணிக்கம்
போல் ஒளிரும் கண்மணியே அருள் வள்ளலே
இறைவா உன்னை தொழ மறந்து விட்டோம் !
விரும்பதகாத உணவாக நாய் வேறு வழியின்றி
மலத்தைகூட உண்ணும் அதுபோல மனிதர்களும்
கண்டதை சாப்பிடுகிறார்கள்! அதனால் நரம்பு
முறுக்கேறி தீச்செயல் புரிகின்றனர். திமிர் ஏறபெற்றவர்கள்
ஆகின்றனர்! முடிவு உச்சி முதல் உள்ளங்கால்
வரை உள்ள நாடி நரம்பு தசையெல்லாம் நடுங்க
நடுநடுங்க விந்து வெளியேறும் சக்தி வெளியேறும்.
இதுவே பெருந்தண்டனை.

காமத்தால் விந்து வெளியேறும். தவத்தால் விந்து
ஊர்த்துவரேதஸாக மேலேறும், ஞானம் கிட்டும்.
காமம் சிற்றின்பம் - துன்பம் வேதனை. ஞானம்
பேரின்பம் - பரவச நிலை கிட்டும். தெய்வத்தை
நினைந்து மனம் தூய்மையாகுமானால் இந்த
தண்டனை கிடையாது.

கண்ணினால் உனது கழற்பதம் காணும் கருத்து - பாடல் 3
வள்ளல் பெருமான் தெளிவாக கூறுகிறார். இறைவா
உன் கழல் அணிந்த திருவடியை கண்ணால் காணும் பாக்கியமே !
அதில் கருத்தை வைத்து தவமே செய்தாலே பெரும் பேறாகும் என்கிறார்.

வயிறு நிறைய சோறு உண்டால் ஏற்படும் அசதி அதனால் ஏற்படும் தூக்கம் -
சோம்பேறித்தனம் இவை ஞானத்துக்கு ஏற்புடையதல்ல! எக்காலமும்
எக்காரணத்தை கொண்டும் அரைவயிறு உணவே உட்கொள்ள வேண்டும்.

விழிக்குள் நின்றிலங்கும் விளங்கொளி மணியே - பாடல் 5
கண்விழியில் கண்மணியில் நின்றிலங்கும் ஒளிவிட்டு பிரகாசிக்கும் மணியே
இறைவா என்கிறார் வள்ளலார்!

முறைப்படி நினது முன்பு நின்றேத்தி முன்னிய பின்னர் உண்ணாமல் - பாடல் 10காலை எழுந்து இறைவனை வணங்கி ஜபதபங்கள் நித்யா அனுஸ்டானங்கள்செய்த
பின்னரே உணவு உட்கொள்ள வேண்டும். இதுதான் முறை.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

No comments:

Post a Comment