Tuesday 4 October 2016

ஆற்றா விரகம்


தணிகை மலையைச் சாரேனோ
சாமி யழகைப் பாரேனோ
பிணிகை யரையைப் பேரேனோ
பேரா அன்பு கூரேனோ
அணிசெய் அருள்நீர் ஆரேனோ
ஆறாத் தாகம் தீரேனோ
பணிசெய் தொழும்பில் சேரேனோ
பார்மீ திரங்கும்  நீரேனோ


தணிகை மலையான என் கண்மணியை சார்ந்தால் - சேர்ந்தால்
சாமி அழகு - ஒளி அழகை கண்டு களிக்கலாம் . என்னுடைய எல்லா
பிணிகளும் போய்விடும். மிகப்பெரிய பிணியாகிய பிறவிப்பிணியே
போய்விடும். இறையன்பு பெற்று அடியாராகலாம். ஒளி தரிசனம் பெற்று
அடியாராகலாம். ஒளி தரிசனம் பெற்று உள் புகுந்து தவம் தொடரும்
காலையில் உள்ளிருந்து அமுதம் கிடைக்கும்.  நம் தாகம் பசி எல்லாம்
போய்விடும். இறைவனுக்கு தொண்டு செய்யும் அடியார்களோடு
சத்சங்கம் கொண்டு தவம் செய்வார்க்கு இது கிட்டும்!

புவிமீது இருகால் மாடேனே - பாடல் 3

நான்கு கால் மாடு வண்டி இழுக்கவும் வயலில் உழவும் உதவும்.
தணிகை மலையை - தன் கண்மணியை ஒளியை அறியாதவன்
உலகில் உள்ள இரு கால்மாடு ஆகும். மனிதன் யார் என்றால் மனதை
இதம் பண்ண தெரிந்தவன். பக்குவமாக, தவம் செய்து இறைவனை
அடைபவன் மனிதன். மனம் போன போக்கிலே போகிறவன் மிருகம்.
"மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் " என ஒன்றாம்
வகுப்பில் படித்ததில் ஞாபகத்தில் கொள்க.


காட்டும் அவன் தாள் கண்ணேனோ - பாடல் 5
இறைவனை காட்டும் அவன்தாள் - திருவடி அது நம் கண்ணேயாகும்.
அதை அடைய மாட்டேனோ எனப்படுகிறார் வள்ளல் பெருமான்.
அதுமட்டுமா அவன் தாளாகிய - திருவடியாகிய கண்ணே நம்மையும்
காட்டும்! நாம் யார்?  என நமக்கு காட்டித்தரும்!
வள்ளலார்

காவி மலைக்கண் வாதியேனோ
கண்ணுள் மணியை துதியேனோ - பாடல் 7

காவிமலைக்கண் - நாம் தியானம் செய்யும் போது நம் கண் சிவந்து
காவிக்கண்ணாகி விடும். சந்நியாசி காவி கட்ட வேண்டும் என்பர்.
காவித்துணியை உடலில் சுற்றிக் கொள்பவன் சந்நியாசி இல்லை!
கண் வெள்ளை விழி சிவப்பாகி காவியாக எப்போதும் இருப்பவனே
- அதாவது சதா காலமும் தவத்தில் ஆழ்ந்திருப்பவனே உண்மையான
சந்நியாசி. நாம் அந்தகாவி மாலைகண்ணிலேயே வசிக்க வேண்டும்
என்கிறார் வள்ளல் பெருமான்.  கண்ணுள் மணியை நினைந்து உணர்ந்து
துதித்தலே தவம் செய்தலே காவி மலைகண் பெற வழியாகும் .

திருத்தணிகை தேவர் எவர்க்கும் முன்னாரே - பாடல் 8
திருத்தணிகைத்தேவர் - நம் கண்மணி ஒளி எவர்க்கும் முன்னரே
- தியானம் செய்யும் எவர்க்கும் முன்னால் தோன்றுபவர். நம் கண்மணி
ஒளியை தியானம் செய்தால் நம் கண்கள் நமக்கு முன் தோன்றும்.
கண்ணாரக் காணலாம் நம் கண்களையே!

என்தாய் தனக்குத் தாயாரோ - பாடல் 10
இறைவன், எனக்கும் என் தாய்க்கும் தாய்! எல்லாம் வல்ல,
எல்லா உயிர்களையும் படைத்த அந்த இறைவனே எல்லோருக்கும்
உயிர் கொடுத்த தாய்.

No comments:

Post a Comment