Thursday 20 October 2016

ஏழ்மையின் இரங்கல் - திருவருட்பா


தேனே உளங்கொள் தெளிவே அகண்ட
சீதம்மேவி நின்ற சிவமே
கோனே கனிந்த சிவபோத ஞான
குருவே விளங்கு குகனே
தானே தனக்கு நிகராய் விளங்கு
தணிகா சலத்தெம்  அரசே
நான் ஏழை இங்கு மனம் நொந்து நொந்து
நலிகின்ற செய்கை நலமே

தேன்போல் தித்திப்பவனே! உனை உணர்ந்தால் உள்ளத்தெளிவே!
எங்குமாய் பரந்து நின்ற ஒளியே! தலைவா! கண்மணி ஒளி ஏறி ஏறி
கனிந்து அதனால் வெளிப்படும் ஞான குருவே! என்கண்மணி ஒளியாக
விளங்கும் கண்மணி குகைக்குள் இருக்கும் ஒளியே குகனே!
உனக்கு நிகர் நீதான்! கண்மணி ஒளியே என் அரசே அறியாமையில்
உழலும் என்னை ஏழையை அறிவு தந்து ஞானம் தந்து ஞான செல்வந்தனாக்குக! என வள்ளல் பெருமான் வேண்டுகிறார்.

என்னை யான் அறிந்து உன் அடிசேர - பாடல் 8
என்னை நான் அறியவேண்டும்! நான் யார் என அறிய வேண்டும்!
அறிய ஒரே வழி இறைவன் திருவடியை சேர வேண்டும். இறைவன் திருவடியை சேர வேண்டும். இறைவன் திருவடியை நம் சிரசில் கண்மணியில் பதித்துள்ளான்! கண்டுகொள்வீர்! விரைந்து சேர்வீர் உன் கண்மணியில் ஒளியில் அதுவே திருவடி! மலர் பாதம்! இறைவன் திருவடியில் சரணடைந்தால் நாம் யார் என்று அறியலாம்.




ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

No comments:

Post a Comment