Friday 24 November 2017

6.2 திருச்சிற்றம்பலத் தெய்வமணி மாலை



அகர நிலை விளங்கும் சத்தர்கள் அனைவருக்கும் அவர்பால்
அமர்ந்தசக்தி மாரவார்கள் அனைவருக்கும் அவரால்
பகரவரும் அண்டவகை யனைத்தினுக்கும் பிண்டப்
பகுதிகளங் கனைத்தினுக்கும் பாதங்களைத் தினுக்கும்
இகரமுறு முயிர்எவைக்கும் கருவிகளங் கெலைக்கும்
எப்பொருட்க்கும் அனுபவங்கள் எவைக்கும்முக்தி யெவைக்கும்
சிகர முதற் சித்தி வகை யெவைக்கும் ஒளி வழங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்

அ வாகிய வலது கண் ஞான சக்தி விளங்கும் சத்தர்கள்
மும்மூர்த்திகள் பஞ்ச மூர்த்திகள் மற்றும் அவர்கள் தேவிமார்கள்
அனைவருக்கும் இவர்களால் தோற்றுவைக்கப்பட்ட அண்டங்கள்
அனைத்துக்கும் அவற்றுள் பொருந்தி விளங்கும் பிண்டப்பகுதி
அனைத்துக்கும் , இந்திரன் முதலான தேவர்கள் உறையும் பதங்கள்
யாவற்றுக்கும், இம்மண்ணுலக உயிர் அனைத்திற்கும், இவைகளுக்கமைந்த
உடற்கருவிகள் அனைத்திற்கும் பொருள்வகை யாவற்றுக்கும், அவற்றால்
அனுபவிக்க படும் அனுபவங்கள் எல்லாவற்றுக்கும் முடிவில்
பெறக்கூடிய முக்திவகை யாவற்றுக்கும் ஒளியையும் பயனையும்
நல்குவது தில்லை சிற்றம்பலத்திலே  - தில்லை வெளியை கொண்ட
சின்ன அம்பலமான கண்களிலே ஒளியாக காட்சி தரும் சிவம்
- தெய்வம் ஒன்றே என்ற உண்மையை காணப்பீராக! கண்ணால்!
உணர்வீராக! 

Gnana Sarguru Sivaselvaraj
www.vallalyaar.com

No comments:

Post a Comment