Sunday 3 December 2017

6.3 ஆற்றாமை

ஆற்றாமை

ஏழுவினும் வலிய மனத்தினேன்
மலஞ்சார் ஈயினம் நாயினும் இழிந்தேன்
புழுவினும் சிறியேன் பொய்விழைந் துழல்வேன்
புன்மையேன் புலைத்தொழில் கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன்
மாண்பிலா வஞ்சக நெஞ்சகக்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே


அடியேன் தூணை விட கடினமான வன்மையுடைய
மனம் கொண்டவன்! கூட்டமாக கூடி மலம் உண்ணும் ஈயை
விடவும் தனித்திருந்து மலம் உண்ணும் நாயை விடவும்
கேவலமானவன்!  புழுவை விட சிறியவன் அற்பன்! பொய்
பேசி பொய் வாழ்க்கை வாழ்பவன்! புல்லறிவாலன்!கொலை புலை
இயற்றும் புலையனை விட தரம் தாழ்ந்தவன்! எல்லா குற்றமும்
பஞ்சமா பாதகமும் செய்வதில் நான் தான் பெரியவன் ! அறிவில்லாத
முட்டாளும் நானே! நல்ல பண்பு இல்லாத மரியாதை தெரியாத வஞ்ச நெஞ்சமுடையவன் !

இப்படி பட்ட மகா கேவலமான யான், அற்புத அம்பலத்தில் நடமாடும் சிவத்தை அடைய அவர் அருள்பெற என்ன செய்ய வேண்டுமோ!? ஒரே வழி!
நம்கண்மணியில் நடனமிடும் சிவத்தை உணர்ந்து "சும்மா இரு" ந்தாலே போதும்!


No comments:

Post a Comment