Sunday 22 October 2017

6.1 பரசிவ வணக்கம் - ஆறாம் திருமுறை



எல்லாம் செயல்கூடும் என்னாணை யம்பலத்தே
எல்லாம்வல் லான்றனையே ஏத்து

எல்லாம் வல்லவன்! எங்கும் நிறைந்தவன்! இறைவன் ஒருவரே!
அவர் அம்பலத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார்! நம் கண்களில்
மணியில் ஒளியாக, எல்லோரும் அறிய
அம்பலமாக , அந்த அம்பலத்தில்
ஆடிக்கொண்டிருக்கிறார்! அவரை பணிந்து, நினைந்து உணர்ந்து தவம்
செய்தால் ஒளியை கண்ணிலிருந்து உள்வழி அக்னிகலையை கூடிபின்
மேலேற்றினால் நமக்கு எல்லாம் செயல்கூடும்! என்மீது ஆணை என்று
திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளியிருக்கிறார்.






ஞான சற்குரு சிவசெல்வராஜ்

No comments:

Post a Comment